நீ விட்டு சென்ற
நினைவுகளை
என் வீட்டு
ரோஜா செயிடிடம்
தினம் பகிந்துக்கொண்டேன்
பூக்களுக்கும்
ஆசைப் பிறந்தது
உனை காண
தினம் பூக்கவேண்டும் என்று.
இப்போது
தினம் என் சோலையில்
பூக்கள்…

தொட்டராயசுவாமி
நீ விட்டு சென்ற
நினைவுகளை
என் வீட்டு
ரோஜா செயிடிடம்
தினம் பகிந்துக்கொண்டேன்
பூக்களுக்கும்
ஆசைப் பிறந்தது
உனை காண
தினம் பூக்கவேண்டும் என்று.
இப்போது
தினம் என் சோலையில்
பூக்கள்…
நஞ்சருந்தியோ சுருக்கிட்டோ
தற்கொலைக்கு முனையும் பெண்கள்
முன் எச்சரிக்கையுடன் உள்ளாடைகளை
மறக்காமல் அணிந்துக்கொள்கின்றனர்
சொந்த உறவுகளால் தற்கொலைபோல்
கொல்லப்படும் பெண்கள்
இதில் விதிவிலக்கு
மரணத்திற்குப் பின்னான
தங்கள் நிர்வாணத்தை நினைத்து
அஞ்சும் அவர்களை
ஆடை ஒருபோதும் காப்பதில்லை
ஏனைய உறவுகளைப் போலவே
அவையும் துரோகம் இழைக்கின்றன
பிரேதப் பரிதோசனை வளாகத்தில்
சூன்யத்தை வெறித்தபடி கிடக்கிறது
மாண்ட பெண்ணின் சடலம்
காட்சிப்பொருளாய் கடை விரியும்
அழகியப் பெண்ணின் நிர்வாணம்
வக்கிரத்தின் விஷக் கொடி
சுவரெங்கும் படர்கிறது
கருத்தப் பச்சையுடன்
பிணவறைக் காப்பாளருக்கு
பொன் முட்டைகளைப் பரிசளிக்கும்
சிறப்பு விருந்தாளியான
நடிகையின் சில்லிட்ட சதை
தன் உடலுக்குத் தானே எரியூட்டி
மாளும் பெண் நெஞ்சுரத்துடன்
நிர்வாணத்துக்கும் வக்கிரத்துக்கும்
சேர்த்தே எரியூட்டுகிறாள்.
-மாலதி மைதரி
Tags: மாலதி மைதரி

தனித்தனி
வர்ணமாய்ப் பிரித்து
உதட்டில் கரைத்து
உயிரை வரைந்த
ஓவியம் இது
உடல் காடெங்கும் முத்தம்.
Tags: முத்தக் காடு

கவிதை..
அதுதான்அவள் பலகீனம்.
அதுதான்
அவள் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்பு.
அதனால்தான்
அவள் அருகாமையில்
எப்போதும்
உயிர்த்துடிப்புடன் நான்.

காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே-
நெஞ்சினில் இன்ப கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தார கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆஹ, என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில் –
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் –
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
- மீரா

எதை இழந்து தேடினாலும்
நீயே கிடைக்க பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே களவாடப்படுகிறது
எவை மறக்கப்படுகிறதோ
அவைகளே நீயாகிறாய்
பின் என்னதான் செய்வதாம்
உன்னை காதலிக்க மட்டுமே செய்வதை தவிற!
Tags: தேவதைகளின் ஊர்வலம், நீ நான்

உனக்காக
வானத்தை
வசப்படுத்த மாட்டேன்
உன் விழிப் பெண்
கண்ணீர் கற்பிழக்காமல்
பார்த்துக் கொள்வேன்
நட்சத்திரங்களால்
ஜரிகை நெய்ய மாட்டேன
என் சுவாசச் சுவரெங்கும்
சித்திரமாய் உன்னை
சித்தரிப்பேன்
வானவில்லின்
வண்ணங்கொண்டு
உனக்கு சேலை
செய்ய மாட்டேன்
உன் வாலிபம்
வானவில் காண
சாரல் மழையாயிருப்பேன்
மேகத்தால்
உனக்கொரு
மெத்தையிட மாட்டேன்
மழை மேகமாய்
உனை நனைத்து
பெண் வாசனை
நுகர்வேன்
உன் உடல் மட்டும் அணைக்காது
உயிரையும் சேர்த்தணைப்பேன்
அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
நீ அணியும் போதும்
அருகிலிருப்பேன்.
சம்மதமா அன்பே!!
பெய்யென பெய்யும் மழை
Tags: காதல், சம்மதமா அன்பே

கடற்கரை மணல்
அந்தி வானம்
ஏங்கும் அலை
ஒழிந்த சூரியன்
நீ
நான்
காதல்!!!
பின் கவிதைகளாய்
என்ன சொல்வது
நீ நான் நாம் என்ற
காதலை தவிற!!!
Tags: காதல்

அலைகளின் நடுவில்
விடுதலை பெற்ற
விருச்சங்களில்
கறைந்தொழுகிய
கடற்கரை மணலில்
காதல்
தீண்டலில் தொடங்கி
சூவாசத்தில் முடியத் துடிக்கும்
ஷிருங்கார சாசனத்தின்
சில்மிசியே!
எனக்காக நடத்த
உன் கால்களும்
உனக்காக மணல் அள்ளிய
என் கைகளும்
நமக்கான காதலை
பதியம் போட்டது
கரையெல்லாம்!
Tags: சில்மிசியே, தேவதைகளின் ஊர்வலம்
Page optimized by WP Minify WordPress Plugin
Recent Comments