இரண்டு வரிகள்
எனக்கா எழுத மாட்டாயா?
வினவி விட்டு
சென்றுவிட்டாய் நீ!
மொத்த தமிழெழுத்துக்களும்
என்னுடன் யுத்தத்திற்கு
தயாராகிவிட்டது!
சமாதன உடன்படிக்கைக்கு
பின்- இருபது வார்த்தைகளுடன்
எழுதத் தொடங்கினேன்!
கைக்கலப்பு மேலோங்கிவிட்டது
அந்த எழுத்துகளுக்கிடையே.
முதழெழுத்தாய் யார் நிற்பதென்று!
பின் என்னதான் செய்ய?
இதையே வைத்துக்கொள்
என் அடிமை சாசனமாக!
இதற்காக நீ மற்றொரு
உலக யுத்தத்தை
என்னிடம் தொடங்கிவிடாதே!
nice poem.& all are nice and romantic’.
really fantastic..
Ooo… so romantic…
fantastic but it ends so quick
No comments
Comments feed for this article
Trackback link: http://thottarayaswamy.adadaa.com/2008/12/18/உலக-யுத்தம்/trackback/