உனக்காக
வானத்தை
வசப்படுத்த மாட்டேன்
உன் விழிப் பெண்
கண்ணீர் கற்பிழக்காமல்
பார்த்துக் கொள்வேன்
நட்சத்திரங்களால்
ஜரிகை நெய்ய மாட்டேன
என் சுவாசச் சுவரெங்கும்
சித்திரமாய் உன்னை
சித்தரிப்பேன்
வானவில்லின்
வண்ணங்கொண்டு
உனக்கு சேலை
செய்ய மாட்டேன்
உன் வாலிபம்
வானவில் காண
சாரல் மழையாயிருப்பேன்
மேகத்தால்
உனக்கொரு
மெத்தையிட மாட்டேன்
மழை மேகமாய்
உனை நனைத்து
பெண் வாசனை
நுகர்வேன்
உன் உடல் மட்டும் அணைக்காது
உயிரையும் சேர்த்தணைப்பேன்
அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
நீ அணியும் போதும்
அருகிலிருப்பேன்.
சம்மதமா அன்பே!!
பெய்யென பெய்யும் மழை
Tags: காதல், சம்மதமா அன்பே
very nice lines….
very nice
No comments
Comments feed for this article
Trackback link: http://thottarayaswamy.adadaa.com/2010/07/26/உனக்காக/trackback/