காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே-
நெஞ்சினில் இன்ப கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தார கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆஹ, என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில் –
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் –
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
– மீரா
Trackback from ulavu.com on April 5, 2011 at 5:43 am
Trackback from Indli.com on April 5, 2011 at 9:12 am
Trackback from valaiyakam.com on April 5, 2011 at 10:15 am
3 comments
Comments feed for this article
Trackback link: http://thottarayaswamy.adadaa.com/2011/04/05/காற்றினிலே-வரும்-கீதம்/trackback/